பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் மீண்டும் சர்ச்சை!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமீபகாலமாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. கடந்த மாதம் ஒரு பேராசிரியர் மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மாணவி வாய்மொழியாக புகார் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து மாணவி எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்காததால் அந்த விவகாரம் கைவிடப்பட்டது. இதே போன்று, கடந்த வாரம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிலிட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருவதாக கூறிவரும் நிலையில், தற்போது கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பல்கலைக் கழகப் பணியாளர்கள் பதவி உயர்வு வழங்கியதில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழந்தைவேலு மற்றும் பதிவாளர் தங்கவேலு உள்ளிட்டோர், முறைகேடாக பதவி உயர்வு பெற்றவர்களிடம் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும், இதுகுறித்து தமிழக ஆளுநர் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி,பெரியார் பல்கலைக் கழக பணியாளர்கள் ஸ்ரீதர், சுதா ஆகியோரின் பெயரில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூறி வருகின்றனர்.
குறிப்பு;பெரியார் பல்கலைக் கழகம்,எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் போன்றவற்றில் எது நடந்தாலும்,என்ன நடந்தாலும்,அதைப்பற்றி திக,திமுக,மற்றும் இவர்கள் கூட்டணிக் கட்சி தலைவர்களும்,சமூக போராளி என கூறிக்கொள்ளும் விஷகிருமிகளும்,ஊடகங்களும் வாய் பொத்தி மௌனம் சாதிப்பர்..
No comments:
Post a Comment