Monday 20 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஆலய அதிசயங்கள்!!
1. திருவண்ணாமலை சுவாமி
எப்போதுமே ராஜகோபுரம் வழியாக
வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான்
வெளியே வருவார்.
2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்
மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு
எந்த கோவிலிலும் இவ்வளவு
அதிகமான கோபுரங்கள் இல்லை.
3. கும்பகோணம் அருகே உள்ள
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்
கோவிலில் தயாராகும் எந்த
நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு
சேர்ப்பதில்லை.
4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி
கோவிலில் பெருமாள் கோவில்களில்
கொடுப்பதுபோல் தீர்த்தம்
கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன்
கோவிலிலும் இது போன்று தீர்த்தம்
கொடுப்பது கிடையாது.
5. மூலவரே வீதிவலம் வருவது,
சிதம்பரம் நடராஜர் மட்டுமே.
6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி
அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக்
குளத்தில் மீன்கள் வளராது.
7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை
அருகிலுள்ள கேரளபுரத்தில்
சிவபெருமானுக்கு கோயில் உள்ளது.
இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும்
அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி
மாதத்திலிருந்து ஆறு மாதங்கள்
வெள்ளை நிறமாகவும், மாசி
மாதத்திலிருந்து ஆறு மாதங்கள்
கறுப்பாகவும் மாறி விடுகிறார்.
சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட
இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி
இருக்கிறது.
8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில்
நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப்
பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும்
தரிசிக்கலாம்.
9. சைவர்களுக்குரிய
திருவாதிரையும்,
வைணவர்களுக்குரிய வைகுண்ட
ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே
திருக்கோயிலில் நடைபெறுவது
சிதம்பரத்தில்.
10. எல்லாத் திருத்தலங்களிலும்
பெருமாளின் இடது கையில் தான்
சங்கு காணப்பெறும்,
திருக்கோவிலூரில் மட்டும் வலது
கையில் சங்கு வைத்துள்ளார்.
11. இமயமலைச் சாரலில் இருக்கும்
திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே
மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள்.
நவம்பர் மாதம் முதல் வாரத்தில்
மூடுவார்கள். நவம்பரில் கோயிலை
மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள்.
அந்த தீபம் மீண்டும் கோயில்
திறக்கப்படும்வரை அதாவது,
ஆறுமாதம் எரிந்துகொண்டே
இருக்கும்.
12. காசியில் பல்லிகள் இருந்தாலும்
ஒலிப்பதில்லை.
13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை
வரை கருடன் பறப்பதில்லை.
14. குளித்தலை, மணப்பாறை வழியில்
இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி
மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள்
பறப்பதில்லை.
15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில்
வடகிழக்குப் பகுதியில்தான் அமைய
வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம்
கூறுகிறது.
16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை
ஒரே கல்லினால் ஆனது. தட்டினால்
வெண்கல ஓசை வரும்.
17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த
கோலத்தில் மிகப் பெரிய திருமேனி.
இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை
வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை.
இத்திருமேனி சில மூலிகைகளால்
ஆக்கப்பட்டது.
18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள
சுருளிமலையில் குகையில்
விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே
இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர்
திருநீர்குகை. திருநீறு தானாகவே
விளையும் மற்ற திருத்தலங்கள்,
கதிர்காமம், மருதமலை, திருநீற்று
மலை, கங்கை கரையில் உள்ள
திருவருணை.
19. ரத்னகிரி மலையில் உள்ள
முருகனுக்கு அபிஷேகம் செய்யும்
பால் சிறிது நேரத்தில் தயிராக
மாறும் அதிசயம் நடக்கிறது.
20. சென்னிமலை முருகனுக்கு
அபிஷேகம் செய்யும் தயிர்
புளிப்பதில்லை.
21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில்
உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர்
சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில்
அருகில் உள்ள மாமரத்தின் அடியில்
இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து
கொண்டேயிருக்கிறது.
22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.
வழக்கறிஞர் முருகப்பன் முருகு

No comments:

Post a Comment