Monday 20 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உங்களுக்கு அருகே, உங்களுக்காக அள்ளித்தரும் வள்ளல்.👍*
நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு நம் எண்ணங்களே காரணம்.
நாம் நம் ஆழ்மனதில் எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நாம் நமக்கு *என்ன வேண்டும்* என்பதை விட நமக்கு *என்ன வேண்டாம்* என்பதை பற்றித்தான் அதிகம் சிந்திக்கிறோம்.
*༺🌷༻*
ஆனால், *இந்த பிரபஞ்சம், நாம் என்ன எண்ணுகிறோமோ, அதை நம்மிடம் தவறாமல் கொண்டு வந்து சேர்க்கிறது* என்பதை நாம் நினைவில் #மகரயாழ் வைத்துக்கொள்ள வேண்டும்.
*༺🌷༻*
ஓரிரு நாட்கள் உங்கள் எண்ணங்களை கவனிக்க முயற்சி செய்யுங்கள்.
*༺🌷༻*
நீங்கள் பயப்படுபவற்றைப்பற்றி, நீங்கள் கவலைப்படுபவற்றைப்பற்றி, உங்களுக்கு தேவை இல்லாததைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா?
அல்லது உங்கள் வாழ்வில் நடந்த மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளைப்பற்றி எண்ணி கொண்டிருக்கிறீர்களா?
நீங்கள் *எதைப்பற்றி அதிக நேரம் எண்ணிக்கொண்டிருக்கிறீர்களோ, அதைத்தான் ஈர்க்கிறீர்கள்* என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
*༺🌷༻*
இன்று நம் மனதில் முதன்மையாக நேர்மறை எண்ணங்களுடன் ஒரு மகிழ்வான மனநிலையில் வாழ்ந்தால், அதே போன்ற ஒரு எதிர்காலத்தை உருவாக்குகிறோம்.
👉இதுதான் *ஈர்ப்பு விதியின் அடிப்படை.*
*༺🌷༻*
இதைக்கொண்டு நம் வாழ்வில் மகரயாழ் எதை வேண்டுமானாலும் பெறலாம்;
மகிழ்ச்சி
செல்வம்
ஆரோக்கியம்
அன்பு
உறவுகள்
நாம் ஒரு எல்லையற்ற ஆற்றல் என்பதையும், *நம் உடல், மனம், உணர்வு எல்லாமே எல்லையற்ற ஆற்றல் கொண்ட பெரும் சக்தி.*
அதுபோலவே, இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஆற்றல் கொண்ட பெரும்சக்திதான் என்பதை நாம் புரிந்து கொண்டால், நம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் இந்த ப்ரபஞ்சத்திடம் கேட்டுப்பெறலாம்.
*༺🌷༻*
நம் மனம் நம் வசமாகிவிடும். நாம் சொன்னதை கேட்கும்.
நம் மனதை கட்டுக்குள் கொண்டுவந்து நாம் விரும்பும் எல்லாவற்றையும் நம் வாழ்வில் ஈர்க்கும் நேரம் வந்துவிட்டது !
*நன்றி: ஈகை சந்திரசேகர்.

No comments:

Post a Comment