Thursday 25 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 இங்கே வாழ்வது கஷ்டம் இல்லை, அடுத்தவனைப் போல் வாழ நினைத்தால் தான் கஷ்டம்.
 எத்தனை அனுசரித்து வாழ்ந்தாலும் குற்றம் கண்டு பிடிக்கும் சுயநலவாதிகள். நாம் நமக்காகவே வாழ்ந்து விடலாம் என்ற விரக்தியை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
 எதிர் பார்ப்பவைகளே நடந்தால் வாழ்க்கையில் வெறும் சந்தோஷம் மட்டும் தான், எதிர் பாராதவைகள் நடந்தால் தான் வாழ்கை சுவாரஸ்யம்.
 எதிர் காலம் என்பது அடுத்த மாதமோ அடுத்த வருஷமோ அல்ல அடுத்த நொடி கூட எதிர் காலம் தான்.
 முன்பின் தெரியாதவரிடம் நம் எல்லா கவலைகளையும், சோகங்களையும் மனம் விட்டு பேசி விடலாம். நம்மைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்களிடம் எதுவும் பேச முடிவதில்லை.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment