Thursday 25 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🍩 படிப்பில், வேலையில், தொழிலில், வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க ஆசை கொள்ளுங்கள். அப்போது தான் உங்களை மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள். இலக்கு எப்போதும் பெரிதாய் இருந்தால் தான் அது இருக்கும் இடத்தையாவது அடைய முடியும்.
🍩 இணையம் தான் உலகம் என்று நினைத்துக் கொண்டு, உடனிருப்பவர்களை இழந்து விடாதீர்கள். இங்கு உங்கள் கஷ்டத்தை சொன்னால் கமெண்ட் வருமே தவிர உதவியோ அங்கீகாரமோ வராது.
🍩 மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக வையுங்கள். கிடைக்கும் இடத்தில் பெற்றுக் கொண்டு, கிடைக்காத இடத்தில் கொடுத்து விட்டு செல்வோம்.
🍩 பிழை இல்லாத மனிதன் என்று யாருமே இல்லை. அதை நாமே திருத்திக் கொள்ளலாம் மற்றவர் குறை காணும் முன்பே.
🍩 ஒருவரை திருத்த நினைத்து அட்வைஸ் பன்றதை விட அவரை எப்படியாவது நல்ல நிலமைக்கு உயர்த்த நினைத்து ஏதாவது உதவி செய்தால் போதும். அவர் திருந்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
நல்லதே நடக்கும்
எல்லாம் நன்மைக்கே
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment