Monday 22 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ரிலாக்ஸ் ப்ளீஸ்:
அவசர காலத்தில் உள்ள நாம் அதைப் போலவே வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.
இதனால் தேவையற்ற *மன பயம், மன உளைச்சல், கவலை, நோய்* என தேவையற்றவைகளையும் காசு கொடுக்காமல் விலைக்கு வாங்குகிறோம்.
நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வதை மறக்க வேண்டாம். வேலை, வேலை, வேலை என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்காமல் இடையிடையே மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது.
யாரிடம் பேசினால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கிறதோ, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
அவர்கள் சொல்லும் வார்த்தைகள், உங்கள் மனதுக்கு தெளிவைத் தரும் குழந்தைகளிடம் பேசி மகிழுங்கள்.
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ் நாளில் ஒழுங்கு படுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்க முடியாது. ஆனால், சிறு பாறையை பெயர்த்தெடுக்க முடியும்.
சமூகத்தில் உங்களால் முடிந்த சிறு, சிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப் படுத்துங்கள் எந்த செயல் செய்தாலும், முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.
வேண்டாவெறுப்பாக, ஒரு வேலையைச் செய்வதை விட, அதை செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், செய்யும் வேலையை காதலியுங்கள்.
ஈடுபாட்டுடன் காட்டிய வேலை, திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும். உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள்.
கோவிலுக்குச் செல்வதை விட, கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தர் கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் உற்சாகம் தரும்.
அதுவும் செய்ய முடியாதவர்கள் தினமும் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளுக்கு நடந்து செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
*உங்கள் விருப்பங்களையும், தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள்.* அது, மன உளைச்சலில் கொண்டு போய் விடும்.
நமது விருப்பு, வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப் பட்டால், பிரதி பலன் எதிர் பாராமல் தயங்காமல் செய்யுங்கள். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பி வரும்.
🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮
வாழ்க்கை வாழ்வதற்காக
நல்லதை பேசுங்கள்

No comments:

Post a Comment