Wednesday 31 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🍳பொருளைக் கொடுத்து உதவுதல் மட்டுமே உதவி என்கிற ஓர் தவறான கண்ணோட்டம் நிலவுகிறது. உங்களது அறிவை, அனுபவத்தை பகிருங்கள் அதுவும் ஓர் சிறந்த கொடையே.
🍳யார் கிட்ட எப்படி பேசனும்னு தெரியாததாலேயே சில உறவுகளையும், நண்பர்களையும் இழக்க நேரிடுகிறது. அதுனால நிதானமா பாத்துப் பேசுங்க.
🍳நிராகரிப்புகளைக் கண்டு நெஞ்சு உடையாதே உன்னை யாராவது தூக்கி எறிகிறார்கள் என்றால் இறைவன் உன்னை மேலே தூக்கி விடுகிறான் என்று அர்த்தம்.
🍳வீட்டிற்கும், நாட்டிற்கும் மிகச் சிறந்த சேவை என்பது, உன் வேலையை அடுத்தவங்க உதவி இல்லாமல், நீயே செய்து கொள்வதே.
🍳மத்தவங்க நம்மள பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்குற ஆர்வத்தை குறைச்சாலே இருக்குற மீதி வாழ்க்கையை நிம்மதியா வாழலாம்.
நடப்பது நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment