Tuesday 23 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 ஒரு விஷயம் நம்மை ரொம்ப எமோஷனலா பாதிக்கும் போது அதை சூழ்நிலை சிக்கலாக நினைத்து முடிவெடுத்தால் பிரச்சனையை கொஞ்சம் சுலபமா கையாள முடியும்.
 வெறும் நம்பிக்கையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது, அதற்கான முயற்சிகள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும்.
 தேவைப் படும் போது நம்மைத் தேடுகிறார்கள் என வருந்த வேண்டியதில்லை. மின்சாரம் இல்லாத போது தேடும் மெழுகுவர்த்தியாகவாவது இருக்கிறோமே என பெருமைப் படலாம்.
 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியமே தவிர பணமில்லை.
 குழந்தைகள் தவறு செய்தால் நம்மிடம் பயப்படலாம். நம்மிடம் பேசுவதற்கே பயப் பட்டால் தவறு நம் மீது தான்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment