Monday 29 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நமது ஏற்ற தாழ்வுக்கு காரணம் நம் எண்ணங்களே.
மனது சந்தோஷமா இருக்கும் போது பாதைகளைப் பற்றி பயம் ஏற்படுவதில்லை. எப்பவுமே சந்தோஷமா இருங்க. எதிர் காலத்தை எதிர் கொள்ள மகிழ்ச்சியான மன நிலையும் சூழ்நிலையும் அமையும்.
இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவு கடினமாக வேண்டுமானாலும் தெரியலாம். ஆனால், செய்வதற்கும் வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கிறது.
நமது எண்ணங்களின் அலைவரிசைக்கு ஏற்ப இருந்தால் அவர்கள் நல்லவர்கள். இல்லையேல் அவர்களின் தரத்திற்கேற்ப பெயரை வைத்து மோசமானவர் ஆக்கி விடுகிறோம்.
நல்லதே நினைப்போம். நன்மையாக முடியட்டும்.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment