Saturday 27 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🐔குடும்பத்தில் கணவனும் மனைவியும் தனக்கு கிடைத்த வாழ்வை. சகித்துக் கொள்வதும், இருப்பதில் திருப்தி அடைவதும், வேதனையை மனதுக்குள்ளாகவே அமுக்கிப் புதைத்து விடுவதால் தான் பல குடும்பங்கள் உடைந்து போகாமல் இருக்கிறது.
🐔கற்றுக் கொள்வதும், கற்றுக் கொண்டதை பயன் படுத்தி முன்னேறுவதும் தான் மனிதனின் தனித்துவங்கள்.
🐔நன்றாக உழைப்பவனை பார்த்து பொறாமைப் படாத உலகம், உழைப்பின் பயனால் உயர்வைப் பார்த்துப் பொறாமைப் படுகிறது.
🐔ஆணோ பெண்ணோ அடுத்தவரை எப்படியாவது மாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் கல்யாணம் செய்யாதீர். இழப்பு உங்களுக்கும் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் தான். அப்படியே ஏற்றுக் கொள்வதே ஆகச் சிறந்த உறவிற்கான வழி முறை.
🐔மனம் உருகி இறைவனை வணங்குவது மட்டும் தியானம் அல்ல. மனம் ஒருங்கிணைந்து அன்றாட வேலையில் ஈடுபடுவதும் ஒரு வகை
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment