Monday 22 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🍁 சோதனைகளும் வேதனைகளும் ஒன்றாய்ச் சேர்ந்ததே வாழ்க்கை என்று புலம்புவதை விட்டு விட்டு. சாதனைகளும் சந்தோசமும் நிறைந்ததே வாழ்க்கை என்று வாழ்வோம்.
🍁 உலகில் விலை மதிப்பில்லாதது நம்மிடம் இருக்கும் பணமும் பொருளும் அல்ல. நம் மீது அக்கறை உள்ளவர்கள் நம்முடன் நட்பாக இருப்பது தான்.
🍁 வெற்றி அடைந்தவர்களால் மட்டுமே தன்னுடைய முந்தைய கால தோல்விகளை பெருமையாக வெளியே சொல்ல முடியும்.
🍁 பிள்ளைகளுக்கு தவறுகளை சுட்டிக் காட்டுவதை விட அதன் விளைவுகளை சுற்றிக் காட்டுவதே சிறந்தது.
🍁 தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொள்ள தெரிந்தவர்கள் மட்டுமே, தன் கவலைகளை விளம்பரப் படுத்துவதில்லை.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment