Saturday 20 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நாட்டின் உயர்ந்த பதவி(பிரதமர்)நாட்டின் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்.பெரிய செல்வந்தர்.உயர் ஜாதி.வெளிநாட்டு உயர் கல்வி.அழகில் ரோஜா.(நேரு)
இவை எதுவும் உன்னிடம் இல்லை.ஆனால் உன்னிடம் ஒழுக்கமும் நேர்மையும் இருந்தது.
அதனால் பாரதி கூறியது போல்,நிமிர்ந்த நன்னடையும்,நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாமையும் உன்னிடம் இருந்தது.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பாடியது போல்,"தமிழன் என்றொரு இனமுண்டு,தனியே அவர்க்கொரு குணமுண்டு"என்பது நீ இருந்தவரை இருந்தது,நீ மறைந்த போது அதுவும் உன்னோடு மறைந்தது.
நீ தமிழன் என்றோ,திராவிடன் என்றோ கூறிக்கொள்ளவில்லை. ஆனால் வாழ்ந்து காட்டினாய்.
நாங்கள் கூறிக்கொள்கின்றோம்,ஆனால் உன்னைப் போல் வாழ்ந்துக் காட்ட ஒருவருமில்லை.
நன்றி ராஜப்பா

No comments:

Post a Comment