நாம் வாழும் முறை .
இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களுக்கும் எல்லாமும் நிறைவாகவே இருக்கத் தான் செய்கிறது.
பேராசைப்பட்டு நாம் தான் நம்மிடம் இருப்பவைகளை அறிந்து முழுமையாக உபயோகித்து மகிழ்ந்து வாழாமல்,பிறரிடம் உள்ளதைப் பார்த்து, பெரும்பாலும் பொறாமைப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.
வாழு! வாழ விடு! எவ்வளவு எளிமையான அழகான வார்த்தை.
வாழ்க்கை என்பது ஒரு பெரிய கடல் போன்றது. அதில் பயணம் செய்வது தான் நாம் வாழும் முறை.
கடல் பயணத்தில் பலவிதமான துயரங்களும், இழப்புக்களும் ஏற்படத் தான் செய்யும்..
அவ்வளவு இடர்ப்பாடுகளையும் கடந்து, பயணத்தை மகிழ்ச்சியாக்கி, அனுபவித்து, நாமும் நல்ல முறையில் வாழ்ந்து, பிறருக்கும் நல்ல உதாரணமாய், உபயோகமானவர்களாக வாழ்ந்து காட்டுவோம்...
அதாவது., மனிதனின் எண்ணங்கள் இன்று மாசடைந்து விட்டன என்ற நிலையை மாற்ற நாம் செய்ய வேண்டியது
இப்படிச் செய்தால்., மனிதனின் மாசடைந்த எண்ணங்கள் எங்குமே இல்லை என்ற நிலையை உருவாக்கி விடலாம்.
ஆம் நண்பர்களே
தனக்கு மட்டுமே என்ற நிலையை மாற்றி நமக்கு என்ற நிலைக்குச் சென்றால் மனிதகுலம் மெச்சும்.. நாமும் மனிதரில் மாணிக்கம் ஆகலாம்.
No comments:
Post a Comment