பொன் புதுப்பட்டியில் பெரியவர்கள் நலன் காத்திடும் நாச்சம்மை ஆச்சி உணவகம் மூன்றாம் ஆண்டு விழா.
புதுக்கோட்டை மாவட்டம் பொன் புதுப்பட்டியில் செயல்பட்டு வரும் பெரியவர்கள் நலன் காத்திடும் நாச்சம்மை ஆச்சி உணவகம் மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் தலைவர் டாக்டர் எஸ். சண்முகம் அவர்களின் மனைவி பெயரில் செயல்பட்டு வருகிறது. அதன் மூன்றாம் ஆண்டு விழா இன்று காலை நடைபெற்றது.
அவரது மகனும் மதுரை வடக்கு நகரத்தார் சங்கத்தின் தலைவருமான எஸ் பி எஸ் எஸ். சுப்பிரமணியன் உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இங்கிருந்து பொன் புதுப்பட்டி மற்றும் வலையபட்டியில் உள்ள வயதான பெரியவர்கள் 30 பேருக்கு தினமும் மூன்று வேளை உணவு சலுகைக் கட்டணத்தில் செல்கின்றது.
No comments:
Post a Comment