லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள். இதன் மூலம் மனம் ஒருமுகப்படுவதோடு, ஆர்வத்துடன் செயலாற்றவும் முடியும்.
ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. சாஸ்திரங்களைப் படிப்பதால் மட்டும் கடவுளை அடைந்து விட முடியாது.
கடவுளை அறிவது மட்டுமே வாழ்வின் நோக்கம். அதற்காகவே நாம் மண்ணில் மனிதர்களாகப் பிறந்திருக்கிறோம்.
நல்ல உணவு மனதில் நல்ல உணர்வுகளைத் தூண்டுகிறது.
குதிரைக்குக் கடிவாளம் போடாவிட்டால் அது நேரான வழியில் போகாது.
அதுபோல், விவேக வைராக்கியங்களாகிய கடிவாளங்களால் மறைக்கப்பட்டவனுடைய மனமும் தீய வழியில் செல்லாது.
No comments:
Post a Comment