Wednesday 21 July 2021

மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய தலைவராக களம் காண உள்ள ஏஎல். எஸ்பி. லெட்சுமணன் அவர்கள்.

 மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய தலைவராக களம் காண உள்ள

ஏஎல். எஸ்பி. லெட்சுமணன் அவர்கள்.
மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது.
அதற்கான களத்தில் தலைவராக சென்ற முறை பெருவாரியான வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வந்த நாட்டரசன்கோட்டை கார் லேனா என்ற
ஏஎல். எஸ்பி. லெட்சுமணன் அவர்கள்
( அரிமா சங்கத்தில் பல்வேறு பொறுப்பில் இருந்து வருபவர், கண்ணாத்தாள் கோவில் மேனாள் அறங்காவலர் குழுத் தலைவர், கிருஷ்ணராயர் தெப்பக்குளம் ஆஞ்சநேயர் கோவில் மேனாள் அறங்காவலர் குழுத் தலைவர், வயிரவன் கோவில் நடப்பு பொருளாளர், மதுரை வாழ் நாட்டரசன்கோட்டை நகரத்தார் அமைப்பின் அமைப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் பேராற்றலுடன் செயல்பட்டவர்.)
இன்று காலை மனிதத்தேனீ யை சந்தித்து பொன்னாடை அணிவித்து மகிழ்ந்த தருணம்.
பாரம்பரியம் மிக்க நமது மதுரை நகரத்தார் சங்கத்தின் எழுச்சி மீண்டும் புத்துணர்வோடு செயல்பட நாம் துணை நின்றிடுவோம்.
அருகில் மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் துணைத் தலைவர், மருந்து வணிகர் சங்கத்தின் மேனாள் தலைவர், திருமலா திருப்பதி பார்மாசூடிகல்ஸ் உரிமையாளர் நாட்டரசன்கோட்டை
வீ. ராமசாமி உள்ளார்.



No comments:

Post a Comment