Wednesday 27 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*தெய்வம் இருப்பது எங்கே*
*༺༻*
சித்த ஞானி ஒருவர் காசி நகர் நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தார்.
உச்சி வெயில் தகித்தது. அவரால் நடக்க முடியவில்லை . ஒரு மரத்தின் நிழலில்
படுத்தார், நீண்ட தூரம் நடந்த களைப்பினால் அப்படியே கண் அயர்ந்து விட்டார்.
*༺༻*
சிறிது நேரத்தில் ஓர் இளைஞன் வந்து அவரைத் தட்டி எழுப்பினான்.
கண் விழித்துப் பார்த்தார் சித்த ஞானி.
"பெரியவரே! பார்த்தால் ஒரு சித்த ஞானி போல் தெரிகிறீர்கள். ஆனால் அறிவே
இல்லாமல் கடவுள் இருக்கும் திசை நோக்கிக் கால்களை நீட்டிப்
படுத்திருக்கிறீரே? புனித காசி நகரின் திசையல்லவா
நீர் கால்களை நீட்டியிருப்பது? இது கடவுளை அவமதிக்கும் செயலாகும்
என்று உமக்குத் தெரியாதா?" என்று கோபமாகக் கேட்டான் அந்த இளைஞன்.
*༺༻*
சித்த ஞானி அவனை அமைதியாகப் பார்த்தார்.
"தம்பி! நான் ஒரு சாதாரண மனிதன்தான். *இறைவன் எந்தத் திசையில் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது.* *அவன் எந்தத் திசையில் இல்லை என்று நீ நினைக்கிறாயோ, அந்தத் திசை நோக்கி என் கால்களைத் திருப்பி விடு!"*
என்றார்.
இளைஞன் அப்போது தான் யோசித்தான்.
*'இறைவன் இல்லாத திசை எது?* எல்லாத் திசைகளிலும் தான் இருக்கிறான்.
அப்படியானால் இந்தப் பெரியவரின் கால்களை எந்தத் திசை நோக்கித்
திருப்புவது?"
நெற்றியில் அடித்தது போன்று நிமிர்ந்தான் இளைஞன்.
*༺༻*
'இறைவன் மனிதனுக்குத் தலையைப் படைத்தது போல் தான் கால்களையும்
படைத்துள்ளான். இந்த இரண்டு உறுப்புக்களில் எது உயர்ந்தது? எது தாழ்ந்தது?
இறைவன் கோபமடைவது எதில்?'
இளைஞன் நிமிர்ந்தான்.
அப்போது சித்த ஞானி, "அன்பனே! நான் ஒரு சித்தன் தான். நாங்கள் பாவம் எது,
புண்ணியம் எது என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. ஆனால்
*உள்மனம் ஏற்காதவற்றைச் செய்யக்கூடாது என்போம். இது தான் சித்த தத்துவம்!"*
என்றார்.
*༺༻*
*'கடவுள்' என்கிற சொல்லைப் போல் சர்ச்சிக்கப்படும் சொல் பிறிதில்லை. அதைப்போன்று சாந்தியும் நிம்மதியும் தருகிற சொல்லும் இல்லை* " (இலக்கியப் படகு,
ப.45) என்பது எழுத்தாளர் திருலோக சீதாராமின் மணிமொழி.
*༺༻*
கடவுள் எங்கே இருக்கிறார்? *"ஆலயங்களிலும், கோயில்களிலும், மட்டுமே ஆண்டவன் இருக்கிறான் எனில், ஆகாயத்திலும் பூமியிலும் அலைகடலிலும் இருப்பது யார்?"* என்பது கபீர் பெருமானின் பொருள் பொதிந்த
கேள்வி.
*༺༻*
கடவுள் எப்போது வருவார்? *"கடவுள் நம்மிடம் அடிக்கடி வருகிறார், ஆனால் பெரும்பாலும் அந்த நேரங்களில் நாம் வீட்டில் இருப்பதில்லை"* என்கிறது
ஃபிரான்ஸ் நாட்டுப் பழமொழி ஒன்று.
*༺༻*
கடவுள் எப்படிப்பட்ட இயல்பு கொண்டவர் தெரியுமா? *"மரத்தடியில் ஆளில்லாத போது தான், ஆண்டவன் தேங்காயை விழச் செய்கிறான்”* என்கிறது ஓர் அரேபியப்
பழமொழி.
*༺༻*
*"கடவுள் தம்மை நோக்கி வருபவனிடம் தாமே செல்கிறார்"* எனத்
தெளிவுபடுத்துகின்றது ஒரு ரஷ்ய நாட்டுப் பழமொழி.

No comments:

Post a Comment