Thursday 14 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சிந்தனையும் பொறுமையும்...
பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது.அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கு தெரியாது.அந்த பெண் யோசிக்கின்றாள்:- “நான் கீழே விழப்போகின்றேன்,என்னை பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது.இந்த ஆண் நன்றாகத்தானே இருக்கின்றான்.அவன் தன்னுடைய வலிமையை திரட்டி என்னை மேலே தூக்கலாம் தானே” என்று
ஆனால் அந்த ஆண் யோசிக்கின்றான்:- “மிகுந்த வலியோடு கூட என் வலிமையெல்லாம் திரட்டி நான் உன்னை தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன்.ஆனால் நீ ஏன் மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை?”
இந்த படம் சொல்லும் நீதி:- எப்போதுமே உங்களால் மற்றவர்களுடைய அழுத்தங்களை/பிரச்சனைகளை பார்க்க முடியாது.அதுபோலவே மற்றவர்களாலும் உங்களுக்குள் என்ன வலி (துன்பம்) இருக்கு என்பதை காண / உணர முடியாது.
இது வாழ்க்கை,வேலை,குடும்பம்,நண்பர்கள்,உணர்வுகள் எப்படியாக இருந்தாலும் , ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முயலவேண்டும்.இன்னும் வித்தியாசமாக சிந்திக்கவும் பொறுமையுடன் கூடிய தெளிவான தொடர்பாடலையும் கற்றுக்கொள்ளல் வேண்டும்.சிந்தனையும் பொறுமையும் நீண்ட தூரம் செல்லக்கூடியது.
மக்களிடம் கருணை காட்டுங்கள்.நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சொந்த பிரச்சனைகளோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment