Thursday 28 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏵அவரவர் வேலையில் கவனம் செலுத்தினால் புதுப் புது சாதனைகள் புரியலாம். அடுத்தவன் வேலையில் கவனம் செலுத்தினால் புதுப் புது வேதனைகள் அடையலாம்.
🏵பேசும் போது வார்த்தைகளை கட்டுப் படுத்தினால் சண்டை வராது. சாப்பிடும் போது வாயை கட்டுப் படுத்தினால் மருத்துவ செலவு வராது.
🏵செய்நன்றி என்பது பதிலுக்கு பதில் உதவி செய்வதல்ல, செய்ததை நினைத்து காலம் முழுவதும் அவருடன் உண்மையான நட்புறவுடன் இருப்பதே.
🏵எல்லாருக்கும் நல்லவங்க மாதிரி நடிக்கிறவங்களுக்குத் தான் இந்த உலகத்துல மதிப்பு. அவங்க தான் நிம்மதியா இருக்காங்க. உண்மையான நல்லவங்க தான் வேஷம் போட தெரியாம மனசு உடைந்து கஷ்டப் பட்றாங்க.
🏵தரம் குறைவானவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு நடப்பவர்களின் அறிவு செயலிழந்து போய் விடும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment