Tuesday 12 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லாம் அவன் செயல்..?
அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கில் ராம்லல்லா சார்பில் வாதாடியவர்களில் 92 வயதான முதுபெரும் வழக்கறிஞர் கே.பராசரன் முக்கியமானவர். ஒரு நாள் இந்த வழக்கு விசாரணையின் போது அவரிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், "உங்கள் வயதுக்கு மதிப்பளித்துச் சொல்கிறேன். ஒரு நாற்காலி போடச் சொல்கிறேன். அமர்ந்து வாதங்களைச் சொல்லுங்கள்" என்றார்.
அதற்கு, "வழக்கறிஞர் நின்று வாதிடுவதுதான் முறை. என் ராமனுக்காக நிற்பேன். நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்" என்று சொல்லி, 92 வயதிலும் நின்றுகொண்டே வாதாடினார். இந்த வழக்கில் அவர் ஒரு ரூபாய்கூட ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை. இதுவே தனது கடைசி வழக்கு என்றும் அறிவித்திருந்தார். நான் இறப்பதற்கு முன் எனது கடைசி ஆசை, இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அயோத்தி வழக்கின் நியாயமான தீர்ப்புக்கு உறுதுணையான தெளிவான, உறுதியான வாதங்களை கே.பராசரன் முன்வைத்த போது, உடன் பக்கபலமாக வாதாடினார் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன். இவர் வழக்கு நடைபெற்ற 40 நாட்களும் காலணி அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு;ஸ்ரீராமனுக்கு அந்த புண்ணிய பூமியில் கோவில் கட்ட இவர்களும்,மற்றும் பல தலைவர்களும் உதவினார்களா.?அல்லது,இவர்கள் மூலம் ஸ்ரீராமனே நிறைவேற்றிக் கொண்டாரா?
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment