Tuesday 26 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*மனம் என்னும் மாயாவி!*
*எப்போதும் தனக்கு சாதகமாகவே....*
*தீர்ப்புச் சொல்கிறது.*
*அப்பாவி என்று தன்னைத் தானே....*
*சொல்லிக்கொள்ளும் மனது...*
*தனக்கு மட்டுமே துயரம்...*
*தன்னை மட்டும் யாரும் நினைப்பதில்லை...*
*இப்படி சதா சர்வ காலமும் தடை போடுகிறது...*
*மண்டியிடுவதும்...*
*சண்டையிடுவதும்...*
*சலிக்காமல் செய்த படி...* *சர்வாதிகாரியாகிறது...*
*தூரமாகவும்...*
*அருகாகவும் மாற்றி மாற்றி...*
*உணர வைத்து ..*
*தன்னை மாயாவி என புகழ்ந்து கொள்கிறது...*
*இத்தனை இம்சைக்கும் நடுவில்...*
*இதயத்தில் ரோஜாக்களையும் நட்டு வைக்கிறது...*
*எது நீ என கேட்டால் மட்டும்....*
*எட்ட நின்று கேலி செய்து சிரிக்கிறது...*
*அடக்கி ஆள்வதுமியலவில்லை!*
*அடங்கிப் போதலும் சாத்தியமில்லை.*
*நண்பனாய்...*
*எதிரியாய்...*
*எப்போதும் என் மனது...*

No comments:

Post a Comment