Friday 15 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில்கள் - தொல்.திருமா.
///
தாய் மகளுக்கு சொல்ல முடியாததை
தந்தை மகனிடம் சொல்ல முடியாததை
அண்ணன் தம்பியிடமோ
அக்கா தங்கையிடமோ
#பேச_முடியாததை..ஏன்
குரு மாணவனுக்கு கூச்சமில்லாமல் கற்பிக்க முடியாததை கூட
#மௌனமாக கற்பித்தவை
எம் கோயில்கள்..
இன்றைய பாலியல் கல்விக்கெல்லாம் முன்னோடி அந்த சிற்பங்கள்..
புனிதமான கோயிலில் அவை வடிக்கப்பபட்டதால் காமம் அசிங்கமல்ல புனிதமானவை என்று உணர்த்தப்பட்டன..
எப்படி எங்கெங்கும் கடவுள் இருந்தாலும் நாம் தரிசிக்கும் இடமான கோயில் புனிதமாகிறதோ அதுபோல..
எங்கும் இன்பம் கிடைத்தாலும்
சமுதாய விதிகளில் முறைப்படுத்தப்பட்ட வழியில் அடையும் போது
அந்த இன்பமும் புனிதம் பெறுகிறது என்பதை உணர்த்துபவை அந்த சிற்பங்கள்..
உயிர்களை உருவாக்கும் கடவுள் எவ்வுளவு உன்னதமானதோ அதைபோல..
உயிர்களை உருவாக்கும் காமமும் அதே அளவு உயர்வானது என்பதை விளக்குவன அந்த சிற்பங்கள்..
ஆம் திருமா அவர்களே..
கோயில்களில்
அந்த அசிங்கமான பொம்மைகளை கடந்துதான் #கருவறையை
மனிதர்கள் அடைய வேண்டும்..
"கருவறை" என்று
ஒன்றை அடைய வேண்டுமானால் மனிதர்கள் அதற்கு அந்த அசிங்கமானவற்றை தாண்டித்தான் சென்றாக வேண்டும் என்று சொல்லாமல் சொன்னது எம் கோயில்கள்...!!!

No comments:

Post a Comment