Tuesday 5 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சிலேடை வரிகள்!😁*
=================
*"காக்காய் கறி* *சமைத்து,கருவாடு மென்று தின்பர் சைவர்"*
*
*இந்தச் சிலேடை வரிகளைப் படிக்கும் சைவர்களுக்கு, கோபம் வரலாம்.*
*
*ஏனென்றால் மேம்போக்காகப் பார்த்தால், காக்கையைக் கறியாக சமைத்தும், கருவாட்டினைப் பொரித்தும்,மென்று சாப்பிடக் கூடியவர்கள் சைவர்கள் என்று பொருள் படுகிறது.*
*
*ஆனால், உண்மையான பொருள் அதுவன்று.*
*
*இந்த சிலேடை வரிகளை எழுதிய கவிஞருக்கு*
*குறும்பு கொஞ்சம் அதிகமாக இருக்க*
*வேண்டும்.*
*
*சைவர்களைக் கேலி செய்வதுபோல்* *எழுதிவிட்டு,அவர்கள் பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாதவர்கள் என்பதை*
*உணர்த்துகிறது இந்த சிலேடை வரிகள்.*
*
*காக்காய் = கால் காய் = காய்கறியின் ஒரு சிறு அளவினைக் குறிக்கிறது.(இப்போதைய அளவில்,கால் கிலோ என்று வைத்துக் கொள்ளுங்கள்.)*
*
*கருவாடு மென்று = கரு,வாடுமென்று = உயிரானது வாடும் என்று,*
*
*பட்டினிப் போட்டு தன் உயிரை வருத்திக் கொள்ள மாட்டார்கள் சைவர்கள்.*
*
*ஒரு சிறு அளவிலேனும், காய்கறிகளைச் சமைத்து,தன்னுடைய கரு, அதாவது தன் உயிர்,பட்டினியால் வாடாமல் இருப்பதற்காக, உண்பார்கள் சைவர்கள்,என்பதே இதில் அடங்கியுள்ள சிலேடையான கருத்தாகும்.*
*
*என்றோ "கல்கி" வார இதழில் நான் படித்து ரசித்தது.*
*
*இவ்வரிகளுக்கான விளக்கத்தினை அளித்திருந்தவர், திரு.கவியரசு கண்ணதாசன் அவர்கள்.*
*
*("கல்கி" வார இதழின், "கண்ணதாசனின் பக்கம்" என்கிற பகுதியிலிருந்து)*

No comments:

Post a Comment