Monday 22 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*‘’பதற்றம்.’’*அதனை வெல்லலாம்...
மனப்பதற்றத்தோடு வாழ்வது மிகவும் சிக்கலானது. வாழ்க்கைக்கு மிக முக்கியமான தேவையான செயல்களை செயல்படுத்த முடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும்.
இதனால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த மாதிரியான வேதனை மிகுந்த வேலைகளில் என்ன செய்யலாம். நல்ல புத்தகங்களை தேர்ந்து எடுத்து படிக்கலாம்.
மூச்சுப் பயிற்சியும் மனப்பதற்றம் இருக்கும் சமயங்களில் மிகவும் உபயோகமளிக்கும்.
மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து கட்டுப்பாட்டில் சில நொடிகள் வைத்து பின்னர் நிதானமாக விடுங்கள்.
இது போலச் செய்வது நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தைப் போக்கி தளர்வடையச் செய்யும்.
மற்றும் அத்தனை பிரச்சினைகளையும் மறந்து உங்கள் கண் முன்னே உங்களுக்கு பிடித்தது போல் ஒரு மகிழ்ச்சியான சுற்றுபுற சூழ்நிலையைகொண்டு வாருங்கள்.
இது உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை தரும். உங்களால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையை தரும்.
உங்கள் செயல்களுக்கு தீர்வு காணப்பட்டது போல் கண் முன்னே நினைத்துப் பாருங்கள். நல்ல மாற்றத்தைத் தரும்.
நீங்கள் மனப் பதற்றத்தில் இருக்கும்போது, உங்கள் அட்ரினல் ஹார்மோன் அதிக அளவு சுரக்கும்.
இது உங்கள் உடலை பாதிக்கும்.
அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் உடல் பயிற்சி செய்யலாம். அப்படி செய்யும்போது, அட்ரினல் சுரப்பி குறைவாக சுரக்கும்.
இதனால் நீங்கள் புத்துணர்வு பெறுவது போல் உணர்வீர்கள்.
அதீத குழப்பங்கள், மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும் போது நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது உங்கள் மனதை திசை திருப்புவதுதான்.
உடனடியாக விளையாட்டிலோ, வெளியில் செல்வதிலோ அல்லது, உங்களுக்கு பிடித்தமானவர்களீடம் பேசுவதையோ செய்ய வேண்டும்.
இதனால் உங்கள் பிரச்சினைகளுக்கு சற்று ஆசுவாசம் கிடைக்கும். பெரும்பாலோனோர் மனப் பதற்றத்தில் ஆளாவதற்கு காரணம் பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பதால்தான்.
எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளுங்கள். இதுதான் உண்மை என நம்பி அவற்றை எப்படி எதிர்கொள்வது என யோசியுங்கள்.
பிரச்சினைகளிலிருந்து முழுவதும் விடுபட ஆலோசிக்க வேண்டுமே தவிர, அவற்றிலிருந்து தப்பிக்க பார்க்கக் கூடாது.
யாருக்கும் பிரச்சினைகளும், மனப்பதற்றங்களும் வராமல் இருக்காது.
அதீத மனப்பதற்றம் உங்கள் மீதுள்ள அவ நம்பிக்கையை காட்டுகிறது.
ஆம்..
நண்பர்களே...
''பதறாத காரியம் சிதறாது'' என்பது பழமொழி.
ஆதலால் எந்த சூழ்நிலைகளிலும் பதற்றம் அடையாமல் சிறப்பாகச் செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

No comments:

Post a Comment