Thursday 25 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*கவரிமான் எங்கு வசிக்கிறது..?*
முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..?
எப்படித் தற்கொலை செய்து கொள்ளும்?
*"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்*
*உயிர்நீப்பர் மானம் வரின்.*
என்கிறார்...
*திருவள்ளுவர்..*( 969ஆம் குறளில் )
'கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும்....
அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள்',
என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்..
ஆனால்
*இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ?*
குழப்பமாக இருக்கிறது அல்லவா?
அந்தக் குறளைக் கவனமாகப் பாருங்கள்..
அதில் சொல்லப்பட்டு இருப்பது *கவரி மான் அல்ல..*
*கவரி மா…*!
ஆம்..
*கவரி மா என்று ஒரு விலங்கு* இருக்கிறது..
அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..
புறநானூற்றில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது..
"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்"…
இமயமலைப் பகுதியில் ,
*கவரிமா என்ற விலங்கு, நரந்தை எனும் புல்லை உண்டு , தன் துணையுடன் மகிழ்ச்சியாக வாழும்* என்பது இதன் பொருள்...
அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல…
இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் வியப்பு...
*கவரிமா என்பது மான் வகையைச் சார்ந்தது அல்ல..*
மாடு வகையைச் சார்ந்தது என்பது அடுத்த வியப்பு...
வள்ளுவர் சொன்னது இதைத்தான் ...
இந்தக் *கவரி மா குறித்து பதிற்றுப் பத்து* போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன...
*முடி சடை போல தொங்கக் கூடிய விலங்கு*தான் கவரிமா…
இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்..
கவரி என்பதில் இருந்துதான் *சவரி முடி* என்ற இன்றைய சொல் உருவானது..
*மா* என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல்.
சரி..
இந்தக் குறளுக்குப் பொருள் என்ன?
பனிப் பகுதியில் வாழும் கவரிமாவுக்கு ,
அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது..
*அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ,*
மனிதர்களால் வெட்டப்பட்டாலோ,
*குளிரினால் இறந்து விடும்..*
அதே போல சில மனிதர்கள்...
அவர்கள் *பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால்,*
அவர்கள் வாழ்வது அரியதாகி விடும்…
எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை..
பெரும்பாலான உரைகளும் தவறு இல்லை..
ஆனால் *கவரிமா வைக் கவரிமான் எனப் புரிந்து கொள்வது தவறு..*!
- பகிர்வு
நன்றி ஸ்ரீ தரன் கே ஆர்

No comments:

Post a Comment