Monday 22 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🎴நம் தேவைகளை வேண்டுமானால் நாமே தீர்மானித்து கொள்ளலாம். அது நிறைவேறுவதும் நிறைவேறாததும் காலத்தின் கையில்.
🎴ஒருவர் உங்களிடம் மற்றவரை பற்றி குறை கூறுகிறார் என்றால் காதில் வாங்காமல் கடந்து செல்லுங்கள்.
🎴அடுத்தவரை திருத்துவது கடினமானது. அது நம் கையில் இல்லை. நம்மை எப்படி மாற்றி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று தான் பார்க்க வேண்டும்.
🎴எந்தவொரு எதிர் பார்ப்பும் இல்லாமல் உதவி தேவைப் படுவோருக்கு உதவி செய்யுங்கள். இதுவே சிறந்த கடவுள் வழிபாடு. இந்தக் காலத்துக்கு உகந்த வழிபாடு. கடவுள் அருள் உங்களுக்குக் கிடைக்கும்.
🎴தெரியாதவர்களுக்கு தெரிந்ததை சொல்லிக் கொடுப்பவர்களை விட, உனக்கு இது தெரியாதா என்று கேலி செய்பவர்களே இங்கு அதிகம். இதனாலேயே பலரது திறமைகள் வெளி வராமல் வீணாகிறது.
நல்லதே நடக்கும்
எல்லாம் நன்மைக்கே

No comments:

Post a Comment