Tuesday 9 April 2024

உழைப்பு உழைப்பு . .

 உழைப்பு உழைப்பு . .

_*எலிப்பொறி உணர்த்தும் தத்துவம் என்னவென்றால்.*_
_*சிரமப்படாமல் கிடைக்கும்*_ _*அனைத்தையும்*_
_*சந்தேகப்படு என்பது தான். *_
*_உழைப்பு சுறுசுறுப்பானது_*
*_அது வசதிகளையும்_*
*_நன்மதிப்பையும்_* *_பெற்றுத்_*
*_தருகிறது._*
*கேள்வி: எந்த விஷயத்தை உரக்கக் கத்தி சொல்ல வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள்*
*பதில்:*
*நான் பேரன்களைப் பார்த்து விட்டேன். அந்த பேரன்களோடு நல்ல நண்பனாகவும் மாறிவிட்டேன்.
அந்த வயதில் உள்ள எல்லோரும் என பேரன்கள் போலவே.
அவர்களுக்கு நான் உறக்க
கத்திச் சொல்ல ஆசைப்படுவதெல்லாம்....*
உனக்குள் சாதிக்க வேண்டும் என்ற சபதம் வேண்டும்.
வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும்.
வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு வேண்டும்.
அடைவதற்கு என்று ஒரு லட்சியம் வேண்டும்.
அந்த லட்சியத்தில் தீவிரம் வேண்டும்
வாய்ப்புகள் எங்கே எங்கே என்று தேடுகிற தாகம் வேண்டும்.
வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை வேண்டும்.
உணவு, உறக்கம், இவற்றைக் கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு வேண்டும்.
தடை, தாமதம், தோல்வி, எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் வேண்டும்.
அடி மேல் அடி விழுந்தாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் வேண்டும்.
தங்கள் தகுதிக்கும், திறமைக்கும், சரியான தீனி எங்கே எங்கே என்று தேடல் வேண்டும்.
சூழ்நிலைக்குத் தகுந்தபடி
அனுசரித்துச் செல்லும் அடக்கம் வேண்டும்.
விமர்சனத்தை சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளும் விவேகம் வேண்டும்.
அறிவு, ஆற்றல், ஆதரவுகள், அனைத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் அறிவு வேண்டும்.
குறிக்கோள் நோக்கிய
வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாக ஒதுக்கும் அக்கறை வேண்டும்.
கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு வேண்டும்.
நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என அளந்து அறியும் ஆர்வம் வேண்டும்.
அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை வேண்டும்.
அத்தனைக்கும் ஆசைப்படு, ஆனால் அந்த ஆசையினால்
யாருக்கும் இன்னல் வராமல் பார்த்துக்கொள்.
அது உனக்கும் தான்.
*கரையில் அமர்ந்து*
*கால்* *நனைப்பவனுக்கும்,*
*அலையில் சிக்கி*
*உயிர்* *மீண்டவனுக்கும்,*
*கடல் வெவ்வேறானது...

No comments:

Post a Comment