Saturday 20 April 2024

சிறகடித்துப் பறக்கலாம் . .

 சிறகடித்துப் பறக்கலாம் . .

_*சந்தோசத்தின் நிலைபாடு*_
_*சில நொடிகளா..*_
_*இல்லை*_
_*நிலையானதா என்பது,*_
_*நம் கையில் இல்லை..*_
_*சூழ்நிலையின்*_ _*சூழ்ச்சியில் உள்ளது.*_
பிரச்சனைகளை மட்டுமல்ல பிரச்னைக்குரிய நபர்களையும் தூரத்தில் வையுங்கள்.
நிம்மதி என்றும்
உங்கள் அருகில் நிலைத்திருக்கும்.
கோபத்தை உங்களின்
கேடயமாகவே பயன்படுத்துங்கள்.
ஒரு போதும் ஆயுதமாக
கோபத்தைப் பயன்படுத்தாதீர்கள்.
நீங்கள் நீங்களாகவே வாழுங்கள் வாழ்க்கை சிறந்த ஆசானாக
உங்களை வழி நடத்தும்.
உங்களை முந்திச் செல்பவர்களைக் கண்டு கலங்காதீர்கள்.
உங்களுக்கான வெற்றியை உங்களால் மட்டுமே நிரப்ப முடியும் துவளாதீர்கள்.
இவ்வுலகில் தூற்றுவோர் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.
அவர்களையெல்லாம்
அடக்க முடியாது,
ஆகவே அலட்சியப்படுத்திடலாம்.
*_நாம் ஓரமாக சென்றாலும்,_*
*_நம் மேல் சேற்றை அடித்து விட்டு_*
*_செல்லும் வண்டிக்கு பெயர் தான்._*
*" வாழ்க்கை "*
_*புன்னகை சிந்துங்கள்..*_
_*அப்போதுதான்*_
_*மனம் எனும் பறவை*_
_*கவலையின்றி*_
_*சிறகடித்துப் பறக்கும்..*_
_*மகிழ்ச்சியாக!*_
*_பேராசை கொண்டவன்_*
*_உலகத்தையே பரிசாக கொடுத்தாலும்_*
*_திருப்தியடைய மாட்டான்!_*
_*வாழ்க்கைங்கிறது சப்பாத்தி மாதிரி உட்காந்து தேய்க்கும் போது கஷ்டமா தெரியும்.*_
_*சாப்பிடும் போது இனிமையா இருக்கும்.*_
_*எதையும் தேடிப்போகக்கூடாது.*_
_*தகுதி இருந்தா அதுவே தேடி வரும்.*_

No comments:

Post a Comment