Monday 21 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனிதர்கள் இடம் உள்ள பணத்தை பொறுத்தே சில உறவினர்கள் கொள்ளும் அக்கறை.
ஆரம்பத்தில் மற்றவர்கள் மீது ஏற்படும் நம்பிக்கை தொடர்ந்து இருப்பதும் இல்லாமல் போவதும் அவர்கள் நம்மிடத்தில் நடந்து கொள்வதை வைத்தே தீர்மானிக்கிறோம்.
யாரை நம்பியும் யாருக்காகவேனும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இறுதியில் நம்மை குற்றவாளி ஆக்கி விடுவார்கள் அவர்கள் இணைந்து.
தெரியவில்லை என்று சொல்வதை விட தெரிந்தால் சொல்லித் தாருங்கள் கற்றுக் கொள்கிறேன் என சொல்லுங்கள். வாழ்வில் முன்னேற்றம் வரும்.
செய்வது தவறென அறிந்தும் செய்து விட்டு தெரியாமல் செய்து விட்டேன் என்கிறான் மனிதன்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment