Wednesday 30 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌸விருப்பமில்லாமல் இருந்தாலும் பழக வேண்டி இருக்கிறது ஆரோக்கியம் இல்லாமல் இருந்தாலும் ஆரோக்கியமாகவே இருக்கிறேன் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. இது தான் இன்றைய உலகம்.
🌸பெற்றோர்கள் தன் பிள்ளைகளை என்ன படிக்க வைக்கலாம் என ஊரில் உள்ள அனைவரிடமும் கேட்பார்கள். ஆனால் தன் பிள்ளையிடம் மட்டும் விருப்பம் என்ன என்று கேட்கவே மாட்டார்கள்.
🌸பிறரின் நியாயமான விளக்கங்களை கேட்பவரை விட தான் சொல்லும் விளக்கமே நியாயமானது என நிரூபிக்க முயல்பவர்களே அதிகம்.
🌸நீ எப்போது மற்றவர்களின் குறைகளைப் பேசுவதைத் தவிர்க்கிறாயோ. அப்போதே உன் குறைகள் குறைந்து வாழ்வு பூரணமாகிறது!
🌸நம்ம மனசுக்குள்ள எதை அதிகமா நினைக்குறோமோ அது அப்படியே நடந்துரும். நல்லதை நிறைய நினைப்போம். நல்லதே நடக்கும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment