Tuesday 22 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🍁கவலையான நேரத்தில் நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். ஆறுதல் கிடைக்காமல் போகலாம். ஆனால் நிச்சயம் கவலைகளின் மன அழுத்தம் குறைந்திருக்கும்.
🍁அக்கறையில் குறைகளை சுட்டிக் காட்டுபவர்களை நம்பலாம். ஆத்திரமூட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடு குறை சொல்பவர்களிடம் இருந்து விலகி இருக்கனும்.
🍁வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப் படாமல், பாராட்டை எதிர்பாராமல் கடமையைச் செய்யுங்கள். உங்கள் திறமையை, நேர்மையைக் கண்டு எல்லோரும் மதிக்கத் தொடங்குவார்கள்.
🍁உழைத்து பொருள் தேடவும் , சிக்கனமாய் செலவழிக்கவும் பெற்றோரைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
🍁நடந்ததை திருத்தவோ, மாத்தவோ முடியாது. அந்த அனுபவங்கள் இனி அடிபடாமல் அமைதியாக இருக்க உதவும். புதிய நாள், புதிய வாய்ப்புகள். உங்கள் முயற்சியால் சந்தோசம் கிடைக்க, நினைப்பது நிறைவேறட்டும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment