⚛"எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்" என்ற மன நிலை எப்போது வருகிறதோ, அப்போது தான் நாம் பயம் என்ற உணர்வில் இருந்து விடு பட முடியும்.
⚛பாதி வாழ்க்கையை படிப்புக்காக செலவழிக்கறோம். மீதி வாழ்க்கையை பணத்துக்காக செலவழிக்கறோம்.
⚛எதையும் விதி என்று கடக்கும் முன் நீங்கள் செய்த தவறு என்ன என்று ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில் உலகம் ஒவ்வொரு முறையும் உங்கள் விளக்கங்களை ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை.
⚛உங்களை மேலே ஏற்றி விட துடிப்பவர், எதை எதிர் பார்த்து செய்கிறார் என்று யோசித்து பார்த்து அவரின் உதவியை ஏற்றுக் கொள்ளவும்.
⚛இறைவனின் திருவடிகளில் அனைத்து ஆசைகளையும் சமா்ப்பிப்பதே மிகவும் சிறந்தது. நமக்கு எது நல்லதோ அதை இறைவன் செய்வான்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நல்லதே நடக்கும்
No comments:
Post a Comment