Wednesday 30 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உங்கள் மதிப்பையும், உள்ளார்ந்த அன்பையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் விலை மதிக்க முடியாத பொக்கிஷம். இழந்து விடாதீர்.
கடவுளிடம் நமக்காகவும் சேர்த்து வேண்டிக் கொள்ளும் நபர்கள் நம்முடன் இருப்பது நமக்கு கிடைத்த வரம்.
எண்ணத்தில் சோகம் சூழ்கையிலே, உள்ளத்தில் வேதனை வருகையிலே, நினைவினில் துணிவும் வரட்டுமே. கவலையும் ஓடியே போகட்டுமே. இரவொன்று வந்தால், பகலொன்று வருமே. இந்த இயற்கை நியதி மன அமைதி தரட்டுமே.
நோய்களிலே மிகக் கொடிய நோய் மற்றவர்கள் மீது அக்கறையற்று இருப்பதே.
கடந்த காலத்தை அசை போட்டுட்டே இருக்காதீங்க, கண்ணீர் வரும். எதிர் காலத்தை பற்றி யோசிச்சிட்டே இருக்காதீங்க, பயம் வரும். இந்த நொடியை மகிழ்ச்சியாக வாழுங்கள். வாழ்க்கையில் சந்தோஷம் வரும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment