Wednesday 30 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

திறமை இருந்தாலும் தாழ்வு மனப்பான்மை இருந்தால் வளர்ச்சி அடைய முடியாது.
தனக்குக் கிடைத்ததை உடனே அடுத்தவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள் என்றால் அது வாட்ஸ்அப் மெசெஜாகத் தான் இருக்கும்.
உதவி என்றால் அது பணம் என்றே பலரால் நம்பப் படுகிறது.
கல்வி என்பது உடல், உள்ளம், அறிவு, ஆன்ம மகிழ்ச்சி எல்லாவற்றிற்குமான சாதனமாக இருந்து முழுமையான மனிதனை உருவாக்க வேண்டும்.
யாரையும் கவர முயற்சிக்காதீர்கள். உங்கள் இயல்பான பழகும் விதமும், குணமும் யதார்த்தமாக இருந்தால் அனைவரும் உங்கள் பக்கம் திரும்புவார்கள்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment