Friday 27 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🔷பணத்தைச் சேர்ப்பது, அதிகாரத்தைச் சேர்ப்பது மட்டும் வாழ்க்கை இல்லை.
இவைகள் வாழ்க்கையின் ஒரு அங்கம். சிறப்பான வாழ்க்கை என்பது நிறைய தியாகங்களை உள்ளடக்கியது.
🔷திட்டமிட்ட செயல், செய்யும் செயலில் பின் வாங்காத முயற்சி, விவேகத்துடன் கூடிய வேகம் இவை அனைத்தும் வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுக்கும்.
🔷ஒருவருடைய கருத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் போதும், அடுத்தவர் மனம் காயப்படாத பதிலையே கொடுப்பது நம் மீதான மதிப்பை அதிகரிக்கும்.
🔷உன்னை பாத்ததுமே நிறைய பேசலாம் என்று எண்ணியிருந்தேன் நண்பா. ஆனால் நாம் சந்தித்த போது. எப்படி இருக்கிறாய்? என்று கூட கேட்காமலேயே சென்று விட்டாய். காலத்தின் மாற்றம்.
🔷வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே, நம்ம உடம்புக்கு நாமே டாக்டராவும், நம்ம சிக்கல்களுக்கு நாமே நீதிபதியாகவும் இருப்பதால தான்.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி திரு அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment