Saturday 21 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு குழந்தையின் மனதுடன் வாழ்வோம்,
***********************************************************
ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப்புறப்பட்டது. கிழக்கே இருந்து
எழுந்த சூரிய ஒளியில் அதன்நிழல் வெகு
நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது.
நரிக்கு ஏக குஷி…
“நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு
பெரியஎனக்குப் பசி தீர வேண்டும் என்றால்
குறைந்தபட்சம் ஒருயானை அல்லது ஒட்டக
மாவது கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்!’
என்று ஊளையிட்டது.
கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப்படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்த
பட்சம் ஒரு யானை, யானைஎன்றபடி காடு
முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது.
தேடிக் கொண்டே இருந்தது; பாவம்,
ஒன்றும் கிடைக்கவில்லை.
மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின்நிழல் சிறுத்து அதன்
காலடியில் விழுந்திருந்தது.”ஆஹா… பசியால்நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்…’
சிறுத்து விட்டோம்என்று வருந்தியது நரி.
இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ,கோழியோ கிடைத்தால் கூட போது மானது என்று தேடியது. ம்ஹூம்,பயனில்லை.
மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல்நரிக்குப் பின்பாக விழுந்தது… அதனால், நரிக்குத் தன் நிழலேதெரிய வில்லை…
”ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம்.
நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது…
ஒரு வேளை இறந்துபோய் விட்டோமோ?’
என்று பயந்தது.
பிறகு, “சீச்சி… நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்தப் பசிக்குஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்..”‘என்று நாக்கைத்
தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.
இந்த நரியின் கற்பனை மாதிரி தான்…
சிலர் தங்களை வெகுபிரமாதமாக எண்ணிக்
கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ
தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டுஅலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கிவாடுகின்றனர்.
காலை நரிபோல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்;
மாலைநரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம்,
ஒரு குழந்தையின் மனதுடன் வாழ்வோம்,
வாழ்வைக் கொண்டாடுவோம்...நன்றி திரு டி ஜி ராமமூர்த்தி

No comments:

Post a Comment