Wednesday 25 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

-------------------
#புத்தர் ஒருமுறை #ஜப்பானில் உள்ள ஒரு ஆலயத்துக்குப் போயிருந்தார்.
அங்கு இருந்த புத்த பிக்குகளில் ஒருவரின் #மேலாடைகிழிந்திருந்தது.
அவர் மேல் பரிதாபப்பட்ட புத்தர், அவருக்கு ஒரு மேலாடையை வாங்கிக் கொடுத்தார்.
மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார்
அந்த புத்த பிக்கு..
சில மாதங்கள் கழித்து, மீண்டும் புத்தர் அந்த ஆலயத்துக்குச் சென்றிருந்த போது, அந்த புத்த பிக்குவைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு,
முன்பு அணிந்திருந்த மேலாடையை என்ன செய்தீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு அந்த புத்த பிக்கு,
‘என் மெத்தைக்கு விரிப்பாக இருக்கிறது’ என்றார்.
முன்பிருந்த மெத்தை விரிப்பு?
‘என் தலையணைக்கு உறையாக இருக்கிறது’
அப்போது முன்பிருந்த தலையணை உறை?
’என் வாசல் மிதியாக இருக்கிறது’
முன்பிருந்த வாசல் மிதி?
’என் விளக்குக்குத் திரியாக இருக்கிறது’ என்றார்
புத்தர்,
அந்த புத்த பிக்குவின் பதில்களைக் கேட்டு வியந்து போனார்.
பொருட்களை ரெட்யூஸ் (#Reduce) ,
#ரீயூஸ் (#Reuse), #ரீசைக்கிள் (#Recycle) ஆகிய மூன்று வகையிலும் பயன்படுத்திய பிறகே,
நாம் அதைக் #குப்பையாகக் கருத வேண்டும். இப்படியான#வாழ்க்கை முறையை வாழ்வது சரியான வழிமுறை.
நம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் எதுவும் குப்பையல்ல. குப்பை என்ற
நினைக்கப்படும் ஒரு பொருள்,
அழகு பொருளாகமாற்றப்பட்டு நம் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும்.

No comments:

Post a Comment