Saturday 21 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*கிருபானந்த வாரியார் கூறியது*
_மனிதர்கள் முன்று வகை உண்டு_
1. கஜ கர்ணம்🐘
2. அஜ கர்ணம்🐏
3. கோ கர்ணம்🐂
*1. கஜகர்ணம் : -*
யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது !!
அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்...
அவர்களை *கஜகர்ணம்* போடுபவர்கள் என்று அழைக்கிறோம்..
*2. அஜகர்ணம் : -*
ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும் !!!
அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்.... திரும்பிப் பார்க்க மாட்டார்கள்...
அவர்களை *அஜகர்ணம்* போடுபவர்கள் என்று அழைக்கிறோம்...
*3. கோகர்ணம் 😗
பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் !!!
அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள்...
இவர்களை *கோகர்ணம்* போடுபவர்கள் என்று அழைக்கிறோம்...
நன்றி கனகசபை ராமசாமி

No comments:

Post a Comment