Friday 27 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கண் பார்வை தெளிவாகத் தெரிய வேண்டுமா?…
2 ரூபாய் மட்டும் செலவு பண்ணுங்க…
**********************************************************************
நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறையில் இருந்து நம் இன்றைய வாழ்க்கை முறை வெகுவாக மாறிவிட்டது. அதனால் இப்போது சின்ன குழந்தைகள் கூட கண் பார்வை குறைபாடு உண்டாகி, கண்ணாடி போட்டுவிடுகிறார்கள்.
அதுபோன்ற பிரச்னைகள்\
உண்டாகாமல் எப்படி தடுப்பது?…
இதுபோன்ற எல்லா விஷயங்களுக்கும்
நம்முடைய முன்னோர்களிடம் தீர்வுகள் இருந்தது.
கண்பார்வை மங்கலாகத் தெரிந்தால் கண்ணாடி போடுவது, மாத்திரைகள் சாப்பிடுவது, காய்கறிகள் சாப்பிடுவது என்று பல வழிகளை பின்பற்றுவோம்.
கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள் ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து, இரவு தூங்கும்போது கண்ணைச் சுற்றி பற்றுப்போட்டு பின், காலையில் எழுந்ததும் கழுவிவிட வேண்டும்.
இதை தினமும் செய்வதோடு திரிபலா பொடியையோ அல்லது சூரணத்தையோ தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
ஜாதிக்காய் பார்வையைத் தெளிவுபடுத்துவதோடு கண்ணைச் சுற்றியுள்ள கருவளையத்தையும் குணப்படுத்தும்.நன்றி
டி ஜி ராமமூர்த்தி

No comments:

Post a Comment