Tuesday 24 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனிதனைப் போல எந்த மிருகமும் சாப்பிடுவதில்லை.
ஒவ்வொரு மிருகத்திற்கும் அதுவாக தேர்ந்தெடுத்த உணவிருக்கும்.
நீங்கள் எருமை மாட்டைப் பிடித்துத் தோட்டத்தில் விட்டால், அது ஒரு குறிப்பிட்ட புல்லைத்தான் தின்னும்.
அவை எதையும் எல்லாவற்றையும் தின்று கொண்டே இருக்காது. அவை தேர்ந்தெடுக்கும்.
அவைகளுக்கு உணவைப் பற்றி சில குறிப்பிட்ட உணர்வுகள் இருக்கும்.
மனிதன் முழுமையாகத் தொலைத்துவிட்டான். அவனுக்கு உணவைப் பற்றி உணர்வே கிடையாது.
அவன் எதையும், எப்போதும் தின்று கொண்டே இருப்பான். உண்மையில் நீங்கள் எங்காவது, எதையாவது மனிதன் சாப்பிடாததைக் கண்டு பிகிக்கவே முடியாது. சில இடங்களில் அவர்கள் எறும்பை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில், பாம்புகளை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில் நாய்களை சாப்பிடுகிறார்கள். மனிதன் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான். மனிதனுக்குப் பைத்தியம். அவன் உடலோடு என்ன எதிரொலிக்கிறது என்பது தெரியாது. இல்லாதது தெரியும். அவன் முற்றிலுமாகக் குழம்பிப் போயிருக்கிறான். மனிதன், இயற்கையிலேயே ஒரு சைவமாகத்தான் இருக்க வேண்டும். காரணம் முழு உடலுமே சைவத்திற்காக உருவாக்கப்பட்டதுதான். ஒவ்வொரு விஞ்சானியும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறார்கள். மனித உடலின் முழு அமைப்புமே அவன் அசைவமாக இருக்கக்கூடாது என்பதைத்தான் காட்டுகிறது. மனிதன் குரங்கிலிருந்து வந்தவன். குரங்குகள் சைவம். சுத்த சைவம். டார்வின் உண்மையென்றால் மனிதன் சுத்த சைவமாகத்தான் இருக்க வேண்டும். இப்போது சில மிருகங்கள் சைவமா அசைவமா என்பதைப் பார்க்க வழிகள் இருக்கின்றன. அது குடலைப் பொறுத்தது. குடலின் நீளத்தைப் பொறுத்தது. அசைவ மிருகங்களுக்கு சின்ன குடல் இருக்கும். புலிகள், சிங்கம் இவற்றிற்கு சின்ன குடல்தான். அதற்கு காரணம் மாமிசம் என்பது ஏற்கனவே ஜீரணக்கிப்பட்ட உணவுதான். அதற்கு ஜீரணத்திற்கு நீண்ட குடல் தேவையில்லை. ஜீரண வேலையை அந்த மிருகமே செய்துவிடும். இப்போது நீங்கள் மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடப் போகிறீர்கள். அது ஏற்கனவே ஜீரணம் அனைத்து. பெரிய குடல் தேவையில்லை. மனிதனுக்குத்தான் மிக நீளமான குடல்கள். அதாவது மனிதன் சைவம். ஒரு நீண்ட ஜீரணம் தேவை, அதில் தேவையற்றது நிறைய இருக்கும். அவற்றைத் தூக்கியெறிய வேண்டும்.
மனிதன் அசைவமில்லை. ஆனாலும் அவன் மாமிசத்தைத் தின்று கொண்டேயிருக்கிறான். உடலுக்கு சுமை ஏற்றப்படுகிறது. கிழக்கில், பெரிய தியானிகள் -- புத்தர், மகாவீரர் -- அவர்கள் இந்த உண்மையை வலியுறுத்தியிருக்கிறார்கள். அகிம்சை என்ற கொள்கையினால் அல்ல. அது இரண்டாம் பட்சம். ஆனால் நீ உண்மையிலேயே ஆழ்ந்த தியானத்திற்கு நகர வேண்டுமானால், உங்கள் உடல் எடையற்று இருக்க வேண்டும். இயற்கையாக நகர வேண்டும். உங்கள் உடலிலிருந்து பாரம் இறங்க வேண்டும். அசைவ உணவினால் உடலுக்கு அதிக பாரம்
எது இயற்கையானதோ அதைத்தான் ஒருவர் உண்ணவேண்டும். உங்களுக்கு எது இயற்கையோ அதை. பழங்கள், பருப்புகள், காய்கறிகள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடுங்கள்,உண்மை என்னவென்றால் இவற்றைத் தேவைக்கு மேல் நீங்கள் சாப்பிடவே முடியாது. எது இயற்கையானதோ அது உங்களுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும். அது உடலுக்கு ஒரு நிறைவை கொடுக்கும். அது உங்களுக்கு ஒரு செறிவைக் கொடுக்கும். நீங்கள் நிறைந்ததாக உணர்வீர்கள்.
ஓஷோ (மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை பக்கம் 229 & 230)நன்றி வைகை விஸ்வநாதன்

No comments:

Post a Comment