Monday 27 December 2021

சிந்தனை வளம் நூல் வெளியீட்டு விழா.

 சிந்தனை வளம் நூல் வெளியீட்டு விழா.

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் - மதுரை திருநகர் பேரூராட்சி, வீடு கட்டும் சங்கம், சவிதாபாய் மேல்நிலைப் பள்ளி, டவுன் கிளப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் 25 ஆண்டுகள் தலைவராகப் பணியாற்றிய கே. ராமன் செட்டியார் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவைப் போற்றிடும் வகையில் சிந்தனை வளம் நூல் வெளியீட்டு விழா எங்கள் இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் தலைமை வகித்தார், ஆர். விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். பொறியாளர் சொ. ராம்குமார் வரவேற்புரை ஆற்றினார். சாமி ஆட்டோ மொபைல்ஸ் மேலாளர்
என். சிவானந்தம் நூலை வெளியிட்டுப் பேசினார், நூலின் முதல் பிரதியை அஸ்டர் இம்பக்ஸ் எக்போர்ட்ஸ் உரிமையாளர்
கே. தேசிகன் பெற்றுக் கொண்டு பேசினார்.
நிறுவனர் நினைவு நிதியை
ஆர். சம்பந்தன் வழங்கினார். விருந்தினர்களுக்கு எம். தங்கமாரியப்பன், பிஎல். சுப்பையா, மூத்த பத்திரிகையாளர் ப. தி௫மலை சால்வை அணிவித்தனர். விசாலாட்சி சொக்கலிங்கம், கஸ்தூரி கிருஷ்ணன், ரேவதி அண்ணாமலை நினைவுப் பரிசினை வழங்கினர்.
நல்லறிஞா் கி. வேலாயுதன், கல்வியாளர் முனைவர் எஸ் எம். கண்ணன், செயலாளர் மலரகம் சந்திரன், பேராசிரியர் சிஎஸ். விசாலாட்சி, பொன். மனோகரன், திருநகர் நடைபயிற்சி நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜி. பாண்டியராஜன், பி. சங்கர குமார், கே தணிகைவாசன், வேகுப்பட்டி எஸ். அண்ணாமலை, வழக்கறிஞர் என. செல்வராஜ், தாம்பிராஸ் இல. அமுதன், வைகாசி விசாகம் சத்தியமூர்த்தி, பொருளாளர் சீ. கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் என். மகேந்திரராஜா, சுற்றமும் நட்பும் இதழ் ஆசிரியர் மீ. ராமசுப்பிரமணியன், காந்திய அன்பர் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான நண்பர்கள் பங்கேற்றனர்.
தியாக தீபம் அ. பாலு நன்றி கூறினார்.
இது ஒரு இலவச வெளியீடு.















No comments:

Post a Comment