Wednesday 22 December 2021

மூன்று விஷயங்கள்.

 மூன்று விஷயங்கள்.

நம்மில் நிறையப் பேர் நினைத்துக்கொண்டு இருக்கோம், வெற்றிங்கிறது என்னமோ ஒரு சாலையைக் கடந்து ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் போகிறமாதிரிதான் என்று…
அவனுக்கு எப்பவுமே ஒரு அதிர்ஷ்டம் இருக்கு, எதை பண்ணினாலும் ஜெயிக்கிறான். நம்ம வாழ்க்கையிலே ஏன் அந்த அதிர்ஷ்டம் வரலேன்னு இராத்திரி பகலா யோசிக்கிறோம். என்ன என்னமோ பண்ணி அந்த அதிர்ஷ்ட தேவதை நம்ம வாழ்க்கையிலே வர ரொம்பவே கஷ்டப்படுகிறோம்.
நல்லா யோசிச்சுப்பாருங்க வெற்றி என்பது ஒரு நேர் கோடு அல்ல, சுலபமாகக் கிடைப்பதற்கு . . வெற்றி அடைஞ்சவங்க வாழ்க்கையைப் புரட்டிப் பாருங்க, வெற்றியாளர்களின் பின்னால் இருப்பது கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் சந்தர்ப்பத்தை சரியா பயன்படுத்துதல்.
இந்த மூன்று விசயம் கண்டிப்பாக ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் இருக்கும்.​
கடின உழைப்பு மட்டும் வெற்றியைத் தராது, எதற்காக நம்முடைய கடின உழைப்பு என்பதைப் பொறுத்து வெற்றி நிர்ணயிக்கப் படுகிறது.
விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்புடன் காலத்தை, சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் . காலமும், சந்தர்ப்பமும் திரும்ப வராதவை, இன்றைக்கு இல்லைன்னா நாளைக்கு புதிய நேரம், புதிய சந்தர்ப்பம் தான் வரும்..
இன்றைக்கு நாம் வீணாக்குகிற ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு சந்தர்ப்பமும் திரும்ப வரப்போவது இல்லை.
வெற்றி என்பது நம்முடைய வாழ்க்கையிலே வரும். சந்தர்ப்பங்களை ஆராய்ந்து, நம்முடைய தகுதி, நம்முடைய திறமையைத் தக்க சமயத்திலே விடா முயற்சியோடு கடின உழைப்பைக் கொடுத்தால் வெற்றி நம்ம கையிலே வரும்.

No comments:

Post a Comment