ஆழ்ந்த இரங்கல்.
கோடி கொடுத்த கொடைஞன் தான் வாழ்ந்த வீடும் கொடுத்த வள்ளல் அழகப்பச் செட்டியார் அவர்களின் மகள்
உமையாள் ராமநாதன் அவர்கள்
இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கல்வியைப் பொதுவில் வைத்து மனிதகுலம் மாண்புற மகத்தான பணியாற்றிய நற்குடும்பம்.
அவர்களுடன் பல நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய மலரும் நினைவுகள் பசுமையாக உள்ளது. பகட்டில்லாமல் பழகும் பண்பாடு, மிக எளிய தோற்றம் என முன்மாதிரியாக இருந்தவர்.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் தரணி எங்கும் சிறப்புச் சேர்த்த பெருந்தகைக் குடும்பம்.
வாழிய நினைவுகள் - மனிதத்தேனீ
No comments:
Post a Comment