Tuesday 21 February 2023

புன்னகையும் சிந்தனையும்.

 புன்னகையும் சிந்தனையும்.

எங்கே சிந்தனை வளமானதாக
விளங்குகின்றதோ அங்கே மனிதர்களும்
தரமானவர்களாக விளங்குவார்கள்.
வளமான சிந்தனை மலர
அறிவுச்
செல்வமாக
“கல்வி” துணை நிற்கின்றது.
ஒழுக்கம் தான் நம்மையும் நம்மைச்
சுற்றி உள்ளவர்களையும் அலங்கரிக்கிறது;
அழகு படுத்துகின்றது.
மரத்தின் பெருமை அதன் உயரத்தால் அல்ல
அது உதிர்க்கும் பழங்களைப் பொறுத்தது.
மலரின் பெருமை அதன் நிறத்தில் அல்ல
அது வெளிப்படுத்தும் மணத்தைப் பொறுத்தது.
அழும்போது தனிமையில் அழு;
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.
உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம்
ஆனால் உன் சிரிப்பு
ஒருவரைக் கூட வேதனைப் படுத்தக் கூடாது.
உலகத்தில் மிக மலிவான பொருள்
அன்பும் புன்னகையும் தான். அவைதான் பெறுபவனுக்கும் வழங்குபவனுக்கும்
அதிக இன்பத்தை வழங்கும்.
அதனால் அதனை அள்ளி வழங்குவோம்.

No comments:

Post a Comment