Thursday 2 February 2023

மன அமைதி பெற்றிடலாம்.

 மன அமைதி பெற்றிடலாம்.

நம் வாழ்க்கையில் அதிக நேரம் சோகங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டே இருக்கிறோம்.
ஏன் மகிழ்ச்சி என்பது விளம்பர இடைவேளை மாதிரி கொஞ்சம் கொஞ்சம் தான் வரும்.
அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா.
அதற்குக் காரணம் நாம் தான்.
நமது வாழ்க்கையில் சோகங்களை அதிகமாக சந்தித்து வருகிறோம். மகிழ்ச்சியை மிகக் குறைவாகவே பார்க்கின்றோம்.
ஏன் சோகங்கள் அதிகமாகவும், மகிழ்ச்சி குறைவாக இருக்கிறது என்ற கேள்வி எழலாம். அதற்குக் காரணமும் நாம் தான்.
நாம் எதை ஒன்றை அதிகமாக நினைத்துக் கொண்டே இருக்கின்றாமோ அதுவே திரும்பித் திரும்பி நம் மனம் கேட்க வைக்கிறது..
பலர் வாழ்க்கையில் மனிதர்களிடம் பேசுவது குறைந்துக் கொண்டே வருகிறது. அது சோகங்களை வைத்திருக்க காரணமாக அமைகிறது.
அது நம்மைச் சுற்றியும் நடக்கிறது. எனவே சோகமாக இருபதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நாம் தான் காரணமாக இருக்கின்றோம்.
நம் வாழ்க்கையின் நேரத்தை குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் நம் மனம் அமைதி ஆகும். ஒரு தன்னம்பிக்கையுடனும் இருக்கும்.
முதலில் நம்மைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நம்மைப் பற்றி நன்கு யோசித்து மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
நம்மை மகிழ்ச்சிப்படுத்துவது என்பது நம்மை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
நம் மன அமைதிக்கும் நாம் நோயிலிருந்து விடுபடவும் நமக்கு நேர்நிலையான எண்ணங்களையும் அதிகம் கற்றுக் கொடுக்கும்.
நாம் மகிழ்ச்சியாக இருப்பது நமது கையில் தான் இருக்கிறது.
நாமும்,நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம். நாமும் மகிழ்ச்சியாக இருந்து, மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவோம்..

No comments:

Post a Comment