Thursday 2 February 2023

விளையாட்டு.

 விளையாட்டு.

*மனதுக்கு மனதே சாட்சி,
மனச்சாட்சியை விட மறு சாட்சி வேறு கிடையாது .*
*தவறான பாதையில் நீண்ட தூரம் சென்று திரும்பிப் பார் .*
நீ புறப்பட்ட இடத்திலேயே உன் மனசாட்சி நின்றிருக்கும் .
*நீ மனசாட்சியைத் திருப்திப் படுத்தினால் மட்டும் போதும்.
வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் .*
*மனிதன் வெளியில் நின்று விளையாடுகிறான். தெய்வம் மறைந்து நின்று விளையாடுகிறது.*
*தெய்வத்தை நம்புகிறவன் தோற்றாலும் ஜெயிக்கிறான். நம்பாதவன் ஜெயித்தாலும் தோற்கிறான்.*
*என்னைத் தவிர நீ யாரையும்
வணங்ககூடாது என்பவரல்ல கடவுள்.*
*நீ எதை வணங்கினாலும் நான் அதில் இருப்பேன் என்பவரே கடவுள்.*
*நீங்கள் தோற்பதுமில்லை, தோற்கப் போவதுமில்லை.*
*நீங்கள் செய்வது ஒன்றேதான், நற்சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். தாங்கிப் பிடிக்க எல்லாம் வல்ல இறைவன் இருக்கிறார் .*
*எந்த நேரத்தில் என்னென்ன திருப்பங்கள் நடக்கும் என்று எவராலும் யூகிக்க முடியாத உலகின் மிகப் பெரிய மர்ம நாவல் .*
*மனிதனின் மனம்*
*குறிகோள் இன்றி வெறுமென வாழ்வது அர்த்தமற்றது .*
*உயர்ந்த லட்சியத்தை ஏற்படுத்தி கொள் .*
*அதற்காகவே இறைவன் உன்னை மனிதனாகப் படைத்து இருக்கிறார் .*

No comments:

Post a Comment