மேனாள் அமைச்சர்
ஆர் பி உதயகுமார் மகள் திருமண வரவேற்பு.
இன்று இரவு மதுரை திருமங்கலம்
டி. குன்னத்தூரில் உள்ள அம்மா திருக்கோயில் மணி மண்டபத்தில் நடைபெற்ற அன்புச் சகோதரர், மேனாள் அமைச்சர், அஇஅதிமுக சட்டமன்ற எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மகள்
திருமண வரவேற்பில் மனிதத்தேனீ.
மற்றும்
தியாக தீபம் அ. பாலு, சுற்றமும் நட்பும் இதழ் ஆசிரியர்
மீ. ராமசுப்பிரமணியன், கனகமகால் ரெ. கார்த்திகேயன்.
மேனாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் சரவணன், தமிழரசன், டாக்டர் பா. சரவணன் டாக்டர் எஸ் ஜி பாலமுருகன் குடும்பத்தினர் , மேனாள் டீன் மருதுபாண்டியன், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி. . ராஜசேகரன், ரோட்டரி மேனாள் ஆளுநர் சைபால் சண்முகசுந்தரம், புலவர் வை. சங்கரலிங்கம், பழங்காநத்தம் வெற்றிவேல், பத்திரிகையாளர்கள் ரமேஷ்பாபு, சுப்பிரமணியன், எஸ் ஜே இதயா, பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு குடும்பத்தினர், சேம்பர் செயலாளர் ஜெ. செல்வம், கலைமகள் பேப்பர் காசி விஸ்வநாதன், மெர்குரி பேப்பர் ராமசாமி உள்ளிட்ட ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
மேனாள் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொழில் வணிக சங்கத்தினர், இலக்கிய ஆர்வலர்கள், அரிமா ரோட்டரி சங்கத்தின் முன்னோடிகள், உறவினர்கள், நண்பர்கள் என எங்கும் பெருமக்களின் திருக்கூட்டம்.
ஏராளமான உணவு அரங்கம், சிறப்பான விரிவான உணவு ஏற்பாடு.
மகளின் மணவிழாவை மாநாடு போல நடத்தி மகிழ்ந்தார்.
நாளை காலை மேனாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மணவிழா நடைபெறுகிறது.
அந்த விழாவில் 51 ஏழை எளிய மக்களின் மணவிழா நடைபெறுகிறது.
இது மக்களின் திருவிழா போல களை கட்டியுள்ளது.
கொரனோ காலத்தில் மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தில் இவரது பங்களிப்பு மற்றும் தினமும் உணவு வழங்கிய போது மணமகளின் செயல்திறன் மிகுந்த பாராட்டுக்குரியது.
மகளின் மணவிழா மற்றும் ஏழை எளிய மக்களின் திருமண விழா ஏற்பாடுகளை கடந்த மூன்று மாதங்களாக அன்புச் சகோதரர்
ஆர் பி உதயகுமார் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment