Thursday 16 February 2023

இன்பமும் துன்பமும்..

 இன்பமும் துன்பமும்..

*போராட்டமே இல்லாத வாழ்க்கை இங்கு யாருக்கும் அமைவதில்லை..*
*போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது. பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது..*
*பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் சத்தம் செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது..*
*போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவதுதான் வாழ்க்கை. இன்று மனிதன், போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றான், அதைத்தான் விரும்புகின்றான்..*
*வாழ்க்கையில் தங்கள் குறிக்கோளை நிலை நிறுத்திக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டி உள்ளது..*
*பூந்தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மலர்கள் பூப்பதுண்டு. ஆனால், அவை நிலைப்பது இல்லை, அது நியதியும் இல்லை..*
*அதுபோலத்தான் வாழ்க்கையெனும் பூந்தோட்டத்தில் இன்பம்,துன்பம் வருவதும் போவதும்.. எவ்வாறு பூந்தோட்டத்தில் மலர்ந்த ஒரு பூ நிலைப்பது இல்லையோ அதேபோல்தான் வாழ்க்கையும்..*
*போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே வெற்றி பெற இயலாது.. போராட்டம் இல்லை என்றால் வாழ்க்கை உப்பு சப்பு இல்லாமல் போய்விடும்.*
*வாழ்க்கையில் உங்களுக்கு அழுவதற்கு நூறு காரணங்கள் இருந்தாலும் சிரிப்பதற்கு என்னிடம் ஆயிரம் காரணங்கள் இருக்கிறது என்று வாழ்ந்து காட்டுங்கள்.*
*சரியான, நேர்மையான வாழ்க்கை பயணப் பாதை முட்கள் நிறைந்த கரடு முரடான பாதைதான்..*
*இந்தப் பாதையில் முட்களாகவும், கரடு முரடான கற்களாகவும், பிறரின் அவமானப் பேச்சுக்களும், பழிச்சொற்களும், நியாயமில்லாத விமர்சனங்களும்தான் நிறைந்து இருக்கும்..*
*களை இல்லாத தோட்டம் இல்லை; அதுபோலவேதான், போராட்டம் இல்லாத வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கையை அழகானதாக மாற்றி கொள்வது நம் கையில்தான் உள்ளது..*
*எல்லோர் வாழ்விலும் இன்ப, துன்பங்கள் உள்ளன. நாம் அவற்றை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். ஆசையை குறைத்துக் கொள்ள வேண்டும். மன நிறைவு இருந்தாலே போதும், வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்..*
*போராட்டங்கள் இருந்தாலும் கூட, யாரும் வாழ்க்கையை வெறுப்பதில்லை. போராட்டங்களை எல்லாம், ஏற்றுக் கொள்ளவும், நமக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளவும் பழகினாலே போதும், வாழ்க்கை பூந்தோட்டமே..''*
*நீங்கள் எப்படிப்பட்ட பாதையில் பயணம் செய்தாலும் உங்கள் நற்சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்புங்கள். வாழ்க்கைப் பயணம் இனிதாய் அமையும்.
வாழ வாருங்கள்;
வாழ்க்கைக்கு வழிகள்
ஆயிரம் உள்ளன..*

No comments:

Post a Comment