Monday 13 February 2023

அகவை 65 இல் தடம் பதிக்கும் நாள்.

 அகவை 65 இல் தடம் பதிக்கும் நாள்.

இன்று காலை மதுரை செனாய் நகர் பகுதியில் உள்ள தாணுமலையான் அறக்கட்டளை நடத்தும் நகர்புற வீடற்ற மக்கள் இல்லத்தில் சிறப்பு உணவு வழங்கி வழக்கம் போல எங்கள் வீட்டுப் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகின்றோம்.
இன்று மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கி நமது அன்பைப் பகிர்ந்து கொள்கிறோம்.
அதன் நிர்வாகி நண்பர் எல் ஐ சி முருகப்பன் மிகச் சிறந்த அர்ப்பணிப்புடன் இதனை நடத்தி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடிகள் தியாக தீபம் அ. பாலு, கவிஞர் மு. முருகேசன், பி. பன்னீர்செல்வம், எழுத்தாளர் கோ. ஏகாம்பரம், கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன் பங்கேற்று அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.
நன்றியுடன் மனிதத்தேனீ.





No comments:

Post a Comment