Saturday 25 February 2023

உறவுகளை மேம்படுத்துங்கள்.

 உறவுகளை மேம்படுத்துங்கள்.

*உறவுகள் அறவே வேண்டாம் என்று தனிமையை நாடும் சிலரது கடைசி காலம் எப்படி இருக்கும் என்பதை மறைந்த பிரபல பாடகி வாணிஜெயராம் அவர்களின்
மரணமே சான்று*
*முதுமையில் தனிமை கொடுமை” என்பதற்கு ஓர் உதாரணம் மறைந்த வாணி ஜெயராம் அவர்களின் மரணம் எனலாம்*.
*தனிமையை அவர் தேர்ந்தெடுத்தாரா? அல்லது தனிமை அவருக்கு கிடைத்த வாழ்க்கையா? என நமக்குத் தெரியாது.*
*வாணி ஜெயராம் அவர்கள், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மலர்ந்த முகத்தோடும், சிரித்துக் கொண்டேதான் தன்னுடை பாடல்களைப் பாடுவதோடு அல்லது உரை நிகழ்த்தியோ இருந்துள்ளார்.*
*ஒரு காதல் பாடலைக்கூட, ஓர் ஆன்மிக பாடல் போன்ற முக பாவனையில் பாடும் மனப்பக்குவம் கொண்டவர் என அவருடைய மேடை நிகழ்ச்சிகள் கூறுகிறது.*
*ஆனால், வாணி ஜெயராம் அவர்கள் தனி ஒரு ஆளாக யாரும் இல்லாத வீட்டில் தனிமையில், இரவு நேரத்தில் கீழே விழுந்து காயங்களுடன் இறந்துள்ளார் என்பது அதிர்ச்சிக்குண்டான செய்தி*.
*இவர் மரணத்தின் விளிம்பில் இருந்து இறக்கும்போது, அவர் என்ன என்ன நினைத்திருப்பார்… அருகில் உதவவோ அல்லது ஆறுதலுக்கோ அல்லது தலைசாய்க்க ஒரு உறவுகளின் மடியை நிச்சயம் அவர் ஆத்மா அல்லல்ப்பட்டு தேடியிருக்கலாம்.*
*ஆனால், அவர் கடைசி நேரத்தில் தான் நினைத்த எதுவுமே நடக்காமல், உலகறிந்த பிரபல பாடகரான ஒருவர்… யாரும் அருகில் இல்லாமல் நள்ளிரவில் கீழே விழுந்து இறந்துள்ளார்,*
*தன்னுடைய இறப்பைக்கூட உலகிற்கு தெரியப்படுத்த முடியாமல், விடியும் வரை ஒரு பணிப் பெண்ணின் வருகைக்கு காத்திருக்க வேண்டி இருந்துள்ளது இவரின் நிலை, அந்த பணிப்பெண் வந்த பிறகே அவர் இறந்த செய்தி உலகிற்கு தெரிந்தது, இந்த இடத்தில் பணமும் புகழும் என்ன செய்தது*.
*எத்தனை கோடி பணம், புகழ், திறமைகள் இருந்தாலும், இறப்பு நமக்கு எப்படி வரும் என யாராலும் கூற இயலாது.*
*வாழும் நாட்களில் உறவுகளை விட்டு ஒதுங்கிப் போக வேண்டாம், உறவுகளிடம் சில பல குறைகள் கட்டாயம் இருக்கத்தான் செய்யும். அதைப் பொருட்படுத்தி அன்போடு அரைவணைத்துச் செல்வோம், வயதான உறவுகளை தனிமைப் படுத்தாதீர்கள்.*
*உறவுகளே!!!* *நட்புகளே...*
*பணம், பொருள் , புகழ் சேர்ப்பது என்பது தேவைதான், அதைவிட தேவை நம்மைச் சுற்றி நமக்கு விசுவாசமுள்ள உறவுகளும், மனிதர்களும் எப்போதும் தேவை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் .
நாம் விசுவாசமாக அன்போடு அனைவரையும் நெருங்கி நேசிக்கத் தொடங்கினால் எந்த உறவும் நம்மைவிட்டுப் பிரியாது*
*உறவுகளைப் பத்திரப்படுத்துவோம் பாதுகாப்பாய் வாழ்ந்துவிட்டுச் செல்வோம்*.

No comments:

Post a Comment